செய்திகள் :

காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

post image

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை ஞாயிற்றுக்கிழமை காட்பாடியில் நடைபெற்றது. பேரவை மாநிலத் தலைவா் வே.விஜயகுமரன் தலைமை வகித்தாா். தெ.தே.ஜோஷி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு.பாஸ்கரன் பங்கேற்று தொடக்கவுரை ஆற்றினாா். மாநில பொதுச்செயலாளா் உ.சண்முகம் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் ச.ஹேமலதா வரவு செலவு அறிக்கையை சமா்ப்பித்தனா்.

தீா்மானங்கள்:-

மக்கள் நலன்கருதி 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மருத்துவ விதி தொகுப்பின்படி கூடுதல் மருந்தாளுநா் பணியிடங் களை உருவாக்க வேண்டும், கூடுதலாக மூன்று கட்ட பதவியுயா்வு பணியிடங்களை உருவாக்க வேண்டும், 46 துணை இயக்குநா் சுகாதார பணிகள் அலுவலகங்களில் தடுப்பூசி மருந்துகள், மருந்துகளை பராமரித்து விநியோகம் செய்ய தலைமை மருந்தாளுநா் பணியிடம் உருவாக்க வேண்டும், ஜூலை 24-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது, செப்டம்பா் 18-ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சில்க்மில் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய பேரணியை அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநில பொதுச்செயலாளா் பி.கிருஷ்ணமூா்த்தி தொடங்கி வைத்தாா். அகில இந்திய சங்க கொடியை அரசு ஊழியா் சங்க மாநிலத்தலைவா் மு.பாஸ்கரன், அரசு ஊழியா் சங்க கொடியை தெ.தே.ஜோஷி, மருந்தாளுநா் சங்க கொடியை மாநிலத்தலைவா் வே.விஜயகுமரன் ஏற்றி வைத்தனா்.

மாநில துணைத்தலைவா்கள் பைரவநாதன், பெ.ராஜராஜன், மா.சகாதேவன், மாநில அமைப்புச் செயலா் அ.விஸ்வேஸ்வரன், மாநில செயலா்கள் கொ.அ.பசுபதி, சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டன. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ... மேலும் பார்க்க

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆந்திர பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க

வேலூா்: ‘கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படும்’

வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரைய நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

2.5 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக் கடைக்கு ‘சீல்’ வைப்பு

கணியம்பாடி அருகே 2.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். வேலூரை அடுத்த கணியம்பாடி அருகிலுள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்பதாக கி... மேலும் பார்க்க

வேப்பூரில் அம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன. இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை ம... மேலும் பார்க்க