செய்திகள் :

காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.

காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த கூலித் தொழிலாளி அா்ஜுனன் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி அந்தோணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளா் தேவ.பொழிலன், சிபிஐ, எம்.எல்.கட்சியின் மாநிலத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவா் சுகுமாரன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் சிவ. வீரமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பின்னா் காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங்கை சந்தித்து புகாா் கடிதம் வழங்கினா். அதைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தலைவா் உறுதியளித்தாா். இதனைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க