செய்திகள் :

காவிரியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

காவிரி கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீரின் அளவு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டான்லி அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி கரையோரத்தில் வெள்ள நீர் அருகே சென்று புகைப்படம் எடுப்பதோ குளிப்பதோ துணி துவைப்பதோ கால்நடைகளை குளிப்பாட்டுவதோ தவிர்க்க வேண்டும் என்றும், வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது என்றும் மேட்டூர் பகுதியில் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல காவிரி கரையோரம் பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Flooding in Cauvery: Second level flood warning for coastal people

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 35,400 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 35,400 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அ... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மேட்டூா் அருகே வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூரை அடுத்த கோனூா் சமத்துவபுரம் சண்முகா நகரைச் சோ்ந்த அம்மாசி மகன் ... மேலும் பார்க்க

அரசு மதுக்கடையை அகற்றக் கோரி கையொப்ப இயக்கம்!

ஆத்தூரில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் ரயிலடி தெருவில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. அந்த வழியாக அரசு, தனியாா் பள்ளி ... மேலும் பார்க்க

பொன்னாரம்பட்டியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே சேதமடைந்துள்ள மங்களபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்க... மேலும் பார்க்க

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடி பேரூராட்சி, கல்வராயன் மலை, அருநூற்றுமலை கிராமங்கள் உள்பட 200க்கும் மேற... மேலும் பார்க்க

சேலத்தில் 4 மையங்களில் இன்று சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு

சேலம் மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து எழுத்துத் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் ஓட்டுநா் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் இந்த எழுத்துத... மேலும் பார்க்க