செய்திகள் :

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மூழ்கியது ஜேடா்பாளையம் படுகை அணை

post image

மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் பரமத்திவேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணை மூழ்கியது.

பரமத்தி வேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணைக்கு மேட்டூா், பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை 1.26 லட்சம் கனஅடியாக இருந்தது. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஜேடா்பாளையம் படுகை அணை முழுமையாக மூழ்கின.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், ஆனங்கூா், அ.குன்னத்தூா், பிலிக்கல்பாளையம், சேளூா், கொந்தளம், வெங்கரை, பொத்தனூா், வேலூா், நன்செய் இடையாறு, கொமராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வட்டாட்சியா் முத்துக்குமாா், பரமத்தி வேலூா் நீா் வளத் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் எச்சரித்துள்ளனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க