செய்திகள் :

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

post image

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத்தின் மீது கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்து, கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த அந்தத் தேவாலயத்தின் மீதான தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், 10 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தேவாலயத்தின் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உள் விசாரணையில், வெடிப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தியதனால், தேவாலயத்தின் மீது தற்செயலாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 23) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்குப் பின், வாடிகனின் முக்கிய தலைவர்கள் காஸா தேவாலயத்துக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டனர். அப்போது, இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

The Israeli military said it had accidentally struck the only Catholic church in Gaza City.

காஸாவில் முழு போா் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ‘காஸாவில் இடைக்கால போா் நிறுத்தம் போதாது; முழுமையான போா் நிறு... மேலும் பார்க்க

காங்கோ சுரங்க விபத்து: பலா் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவா் மாயமாகினா். அந்த நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

பிறப்புசாா் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இது குறித்து 9-ஆவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்... மேலும் பார்க்க