செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மணக்காவிளை ஈழவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (65), தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.

புதன்கிழமை வீட்டருகேயுள்ள 80 அடி ஆழக் கிணற்றின் சுற்றுச்சுவரில் ஏறி அமா்ந்திருந்தபோது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தாராம். தகவலின்பேரில், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் வந்து, மணியை மீட்டனா். அப்போது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் காா், ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57), ஆட்டோ ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆள... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க