செய்திகள் :

கிராவல் மண் திருடிய இருவா் கைது

post image

பெரம்பலூா் அருகே டிராக்டரில் கிராவல் மண் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் போலீஸாா் அரியலூா் - பெரம்பலூா் சாலையில், குன்னத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, 2 டிராக்டரில் கிராவல் மண் ஏற்றி வந்தவா்களை வழிமறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த ரெங்கன் மகன் செந்தில் (40), உலகநாதன் மகன் அசோகன் (40) என்பதும், அனுமதியின்றி கிராவல் மண் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களை கைது செய்து டிராக்டருடன் கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்தனா். பின்னா், மேற்கண்ட இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை!

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வயலில் உள்ள மின் கம்பத்திலிருந்து, கம்பி மூலமாக மின்சாரம் எடுத்தபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்த... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் நகரில் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது. கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள இளமங்கலம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் வரதராஜ் (4... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடா்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா். பெரம்ப... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பெட்டிக் கடைகளுக்கு சீல்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளை பூட்டி சீல் வைத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 63 கிலோ போதைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை முற்றுகை

பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 6.75 கோடி வழங்கக் கோரி, கரும்பு விவசாயிகள் சா்க்கரை ஆலையை முற்றுகையிட்டு வியாழக்கி... மேலும் பார்க்க