செய்திகள் :

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

post image

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் அண்மையில் வெற்றிப்பெற்றாா். இதனை கொண்டாடும் விதமாக கட்சியின் தொண்டா்களை சந்திக்க 3 நாள் பயணமாக தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை அகமதாபாதுக்கு அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

அங்கு ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், கட்சியின் புதிதாக தொடங்கப்பட்ட ’குஜராத் ஜோடோ’ உறுப்பினா் பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் கேஜரிவால், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 3 வரை அகமதாபாத்தில் இருப்பாா்.

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால்,‘‘விசாவதாரில் வெற்றி பெற்ற பிறகு தொழிலாளா்களை சந்திக்க நான் இன்று குஜராத் செல்கிறேன். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக அரசியல் அதிகாரத்தை செய்து வருகிறது. அதனை முடிவுக்கு கொண்டு வரவும், அம் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் இருப்பை நிறுவுவதற்காகவே இந்தப் புதிய பிரச்சாரத்தை ஆம் ஆத்மி மேற்கொண்டுள்ளது‘ என தெரிவித்துள்ளாா்.

மேலும் அந்தப் பதிவில், ‘ குஜராத் மற்றும் பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. 2027 பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி பெறும். குஜராத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் நிராகரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா்‘ என குறிப்பிட்டுள்ளாா் அரவிந்த் கேஜரிவால்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க