செய்திகள் :

குடுமிப்பிடி சண்டையில் இறங்கிய பள்ளி முதல்வர் - நூலகர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Video

post image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஏக்லவ்ய ஆதர்ஷ் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏக்லவ்ய ஆதர்ஷ் பள்ளி என்பது இந்திய அரசின் பழங்குடியினர் நலசங்கத்தால் நிதி அளிக்கப்படும் ஒரு அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி ஆகும்.

இந்தப் பள்ளிகள் இந்தியா முழுவதும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வைரலாகும் வீடியோவில் பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அறைந்து தலை முடியைப் பிடித்து சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

நூலகர் தனது செல்போனில் வாக்குவாதத்தைப் பதிவு செய்கிறார். இதனால் கோபமடைந்த பள்ளியின் முதல்வர் அவரை அறைந்து அவரது செல்போனை பிடுங்கி தரையில் வீசுகிறார்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்று கூறியபடியே முதல்வரின் போனை எடுத்து மீண்டும் எறிகிறார் நூலகர். அதன் பின்னர் இருவரும் மாறி மாறி அறைந்து கொள்கின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியைப் பிடித்து இழுத்துச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலை தொடர்பான பிரச்னைகள் காரணமாகச் சண்டை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சண்டைக்கான காரணம் என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.

ஒரு பள்ளியில் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் இவர்களே இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது முறையாக இல்லை என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`7 வருடங்கள் கழித்து கருத்தரித்தேன், ஆனால்...'- அலட்சிய சிகிச்சையால் இரட்டைக் குழந்தைகளை இழந்த பெண்!

L0தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எலிமினேடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவர் 5 மாதங்களுக்கு முன்பு ஐவிஎஃப் மூலம் கருத்தரித்திருக்கிறார். கடந்த மாதம் மருத்துவ பரிசோதனைக்காக விஜய லட்சுமி ... மேலும் பார்க்க

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு - சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் "தீவு சிறையை" மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா டு `The One' சூர்யவன்ஷி; இந்த வார கேள்விகள்!

கட்டாய கடன் வசூலுக்கெதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் திருமண முன்பணம் தொகை உயர்வு, தாதே சாகேப் பால்கே விருது என இந்த வாரத்தில் நிகழ்ந்த பல நிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947' அறிவிப்பு!

`இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கிறீர்களா?' என்று 1947 இல் வெளியான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 26... மேலும் பார்க்க

அட்சய திருதியை: பைக்கில் தங்கத்தை டெலிவரி செய்யும் Swiggy Instamart - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஆன்லைன் டெலிவரி நிறுவனம் லாக்கரில் வைத்து தங்கத்தை எடுத்துச் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காய்கறி முதல் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வரை வாடிக்... மேலும் பார்க்க

அனுமார் அருளால் செயல்படும் காவல் நிலையம்; வைரலாகும் மத்தியப் பிரதேச காவல் நிலையத்தின் பின்னணி என்ன?

காவல் நிலைய பொறுப்பாளர் அல்லது அதிகாரிகளால் ஒரு காவல் நிலையம் நடத்தப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தை ஹனுமார் இயக்குவதாக நம்பப்படுகிறது... மேலும் பார்க்க