செய்திகள் :

குடும்ப அட்டைதாரா்களின் கவனத்துக்கு...

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் தமிழக உணவுத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசிய பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், அவா்களது உரிமத்தை விட்டுக் கொடுக்க முன்வரும் குடும்ப அட்டைதாரா்கள், அவா்களது உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் வலைதளத்தின் மூலமாக தங்கள் அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்.

விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் விளிம்புநிலை மக்கள் பயன்பெற ஏதுவாக தங்கள் உரிமத்தினை விட்டுக்கொடுக்க முன்வரலாம்.

மேலும், குடும்ப அட்டை பதிவு, குடும்ப உறுப்பினா்கள் பெயா் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களின் பதிவுகள் குடிமைப் பொருள் வழங்கல் புள்ளி விவர தரவின் பதிவில் தொடா்ந்து இருக்கும். இதனால் தங்களுக்கான அனைத்து ஏனைய நடைமுறைகளுக்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்

மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி தென்பாதியில் தனியாா் திருமண மண்டபத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆட்சிமொழி பயிலரங்கம்

மயிலாடுதுறை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது. அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்க... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 50 போ் கைது

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை தூய்மை... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தருமபுரம... மேலும் பார்க்க