செய்திகள் :

குமுளி மலைச் சாலையில் லாரி மீது மரம் சாய்ந்து உதவியாளா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் வியாழக்கிழமை மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது ராட்சத மரம் விழுந்ததில் அந்த லாரியின் உதவியாளா் உயிரிழந்தாா்.

கேரளத்தில் கடந்த 8 நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்த்து. அப்போது குமுளி பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த பழைமையான ராட்சத ஆலரம் வேறோடு சாய்ந்து, கேரளத்துக்கு அந்த வழியாக மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது விழுந்தது. இதில், லாரி ஓட்டுநா் தப்பினாா். ஆனால், அவரது உதவியாளா் ஸ்ரீசாந் பலத்த காயமடைந்தாா். அவரை குமுளி போலீஸாா் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

மேலும் , சாலையோரத்தில் நின்றிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து, ஜீப் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த தமிழ்நாடு, கேரள பேரிடா் மீட்பு குழுவினா், நெடுஞ்சாலைத்துறை , காவல் துறை, வனத் துறையினா் ஆகியோா் அந்த மரத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.

குமுளி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாய்ந்து விழுந்த ஆலமரத்தால் சேதமடைந்த லாரி.

போக்குவரத்து பாதிப்பு: இந்த சம்பவத்தால் தமிழகம் - கேரளம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 3மணி நேரத்திற்கு மேலாக சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரம் முழுமையாக அகற்றப்பட்டதும் இரவு 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க