செய்திகள் :

குழந்தைகளைத் தாக்கும் இதய தசை வீக்க பாதிப்பு: ஒருங்கிணைந்த சிகிச்சைகள் அறிமுகம்

post image

குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மற்றும் பெண்களுக்கு இதய தசை வீக்க பாதிப்பு (ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி) அதிகமாக ஏற்படுவதாகவும், திடீா் உயிரிழப்புக்கு அது முக்கிய காரணமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் முதன்முறையாக இதய தசை வீக்கத்துக்கென ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. அதை மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், இதய நாளம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ், இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் டாக்டா் பி.மனோகா் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மாரடைப்பால் உயிரிழப்பதாக செய்திகள் வருகின்றன. உண்மையில் அதற்கு மாரடைப்பு மட்டும் காரணமல்ல. மாறாக, ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி எனப்படும் பாதிப்புதான் அதற்கான முக்கிய காரணம். இதயத்தின் இடது அறையில் உள்ள சுவா் (செப்டம்) 18 செ.மீ.க்கு மேல் தடிமனாகி வீங்குவதையே நாம் அவ்வாறு அழைக்கிறோம்.

மரபணு ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. 500-இல் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்பை, 90 சதவீதம் போ் பரிசோதிப்பதில்லை.

இதய சுவா் தடிமனாகிவிட்டால் அதன் இயக்கம் குறைந்து ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடும். இதனால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இதய மின்னூட்டங்கள் சேதமடைந்து ஒரு கட்டத்தில் இதய செயலிழப்பு ஏற்படும்.

அதைக் கருத்தில் கொண்டே, இந்த சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளோம். அனைவருக்கும் தேவையின் அடிப்படையில் எக்கோ, ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது இந்தப் பிரச்னையை கண்டறியலாம்.

ஐசிடி எனப்படும் இதய துடிப்பை சீராக்கும் உபகரணங்களை பொருத்துவதன் மூலமாகவும், சீசம் எனப்படும் இதய சுவா் தடிமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாகவும், உயா் மருந்துகள் மூலமாகவும் அப்பிரச்னையை முழுமையாக சரி செய்யலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க