செய்திகள் :

கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

post image

ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவர்.

சில தனித்துவமான இடங்களை தேடி தேடிச் சென்று பார்ப்பார்கள். இதற்கு சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் சென்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பிளவக்கல் அணை

எப்படி இந்த கிராமம் மக்களை ஈர்த்தது என்றால், இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கிராமத்திற்கு வருமாறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வீடியோவின் படி, ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? மன அழுத்தமா? கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமி இது" என பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் மீம் மெட்டீரியலாக மாறி உள்ளது.

இந்த குக்கிராமம் ஒரு தனித்தீவு என்றும் அவர் பேசியிருக்கிறார். தற்போது #koomapatti என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த கிராமத்தை நோக்கி செல்கின்றனர். இந்த கிராமமும் தற்போது சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

கூமாபட்டி எங்கு உள்ளது?

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

'தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன' என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை...1. தட்கல்... மேலும் பார்க்க

காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

லூவ்ரே: உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் மூடல்- என்ன காரணம் தெரியுமா?

உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத்தலமாக லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இப்படி இருக்கையில் இந்த அருங்காட்சியம் திடீரென... மேலும் பார்க்க

இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்றியது! - நடுங்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 4

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஆங்கிலத்தை வெறுக்கும் கொரியர்கள் வறுமையில் இருந்து மீண்டது எப்படி? - 90களின் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க