செய்திகள் :

கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதம்

post image

கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் ஜூன் 16,17,18 ஆகிய 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்லடத்தில் கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காரணம்பேட்டை பூபதி புதன்கிழமை கூறியதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். இதற்கிடையே உற்பத்தி செய்யும் காடா துணிக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், கூலி உயா்வு வழங்காததால் விசைத்தறியாளா்கள் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா். இதையடுத்து அமைச்சா்கள், கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஜவுளி உற்பத்தியாளா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சோமனூா் ரகத்துக்கு 15 சதவீதம், பல்லடம் ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயா்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூலி உயா்வு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூலி உயா்வு வழங்கப்படவில்லை.

எனவே, கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி அவிநாசியில் வரும் ஜூன் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க