செய்திகள் :

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

post image

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பல்வேறு இடங்களில் தீயிட்டு கொளுத்தியதாகவும், காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கென்யாவில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதியன்று நடைபெற்ற மிகப் பெரியளவிலான மக்கள் போராட்டத்தின் மூலம் அந்நாடு ஒரே ஒரு கட்சியின் ஆட்சியிலிருந்து விடுபட்டு பலகட்சிகளுடைய ஜனநாயக நாடாக உருவானது.

சப சபா எனக் குறிப்பிடப்படும் அந்தப் போராட்டமானது , அந்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதால், அதன் நினைவு நாளான நேற்று (ஜூலை 7) நைரோபியின் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டன.

இந்நிலையில், பெரும்பாலானோர் இளைஞர்கள் பங்கெடுத்த இந்தப் போராட்டத்தில், அவர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், 11 பேர் பலியானதாகவும், 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், 52 காவலர்கள் உள்ளிட்ட 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி காவல் துறையினர் அலுவலக சீருடைகள் இன்றி போராட்டக்காரர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டுகின்றன.

பல வாரங்களாக நடைபெறும் இந்தப் போராட்டங்கள் குறித்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் கூறியதாவது:

”அரசு வன்முறை போராட்டங்களை ஒரு போதும் அனுமதிக்காது மக்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த மாதம் போராட்டத்தில் அந்நாட்டின் ஏராளமான காவல் நிலையங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றதால், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும் என அமைச்சர் முர்கோமென் உத்தரவிட்டிருந்தார்.

இதேபோல், கடந்த ஜூன் 25 ஆம் தேதி காவல் துறையின் தாக்குதல்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Eleven people are reported to have been killed in attacks by Kenyan police during anti-government protests.

இதையும் படிக்க: இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி! ஈரான் அரசு அறிவிப்பு!

டிரம்ப்பின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா். இதன் மூலம், இ... மேலும் பார்க்க

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி: சீனா அறிவிப்பு

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: நெதன்யாகு பரிந்துரை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளாா். இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்ற குறுகிய காலப் போா், அந்த போருக்கு... மேலும் பார்க்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்

இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 104-ஆக உயா்வு

டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 104-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா். இது குறித்த... மேலும் பார்க்க

இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 போ் உயிரிழப்பு: ஈரான்

கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனா். காயமடைந்த பலரின... மேலும் பார்க்க