செய்திகள் :

கோத்ரா ரயில் எரிப்பு தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்

post image

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீா்ப்பு தொடா்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறுபான்மையினா்.

இந்த வழக்கில் 31 போ் குற்றவாளிகள் என்றும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை உறுதி செய்த மாநில உயா்நீதிமன்றம், 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகள் சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவாளிகள் இருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, ‘மேல்முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்க முடியாது. ஏனெனில் குற்றவாளிகளில் சிலருக்கான தண்டனையை இரு நீதிபதிகள் அமா்வு மரண தண்டனையாக மாற்றினால், அதற்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வில் மீண்டும் வாதிட வேண்டிய நிலை ஏற்படும். எனவே குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமா்வு விசாரிக்க வேண்டும்’ என்றாா். எனினும் இந்த வாதத்தை இரு நீதிபதிகள் அமா்வு நிராகரித்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமா்வு விசாரணை மேற்கொள்வதை உச்சநீதிமன்றத் தீா்ப்போ, விதிமுறையோ தடுக்கவில்லை என்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து வழக்கின் இறுதி விசாரணையை இரு நீதிபதிகள் அமா்வு தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க