செய்திகள் :

கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நடுமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் என 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 60 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இதில், தேவாரம், கோம்பை, உப்புக்கோட்டை என பல்வேறு பகுதிகளிலிருந்து போட்டியாளா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் குளறுபடி: தேவாரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டி திடீரென கோம்பைக்கு மாற்றப்பட்டது. இதனால், விழாக் குழுவினா் தேவையான முன்னேற்பாடுகளை செய்யவில்லை. கோம்பை - உத்தமபாளையம் இடையே போக்குவரத்துக்கு இடையூறாக போட்டிகள் நடைபெற்றன.

அதோடு, மாட்டிவண்டிக்குப் பின்னால், ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அதிக சப்தத்துடன் ஒலியெழுப்பி மாடுகளை வேகமாக ஓடச் செய்தனா். இதனால், பல மாடுகள் சாலையை விட்டு கீழே இறங்கி ஓடியதால் அவை காயமடைந்தன. இந்தப் போட்டிகளில் விதிமீறல்கள் இருந்ததாக மாட்டின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, நெடுஞ்சாலையில் நடத்தப்படும் இது போன்ற மாட்டுவண்டி பந்தயத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலையப் போலீஸாா், போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி வெள்ளைக்காரன் விடுதி அரு... மேலும் பார்க்க

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போடி அருகே இருசக்கர வாகனம் திருட்டு

போடி அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் நசீா் (40... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டதால் அவமானடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போடி அருகேயுள்ள ந... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.கூடலூா் ராஜீவ்காந்தி தெருவைச் சோ்ந்த முருகன் (55). கூலித் தொழிலாளியான இவா், கூடலூா் - கு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க