செய்திகள் :

விவசாயி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறை தடுக்க முயன்றபோது தாக்கப்பட்டதால் அவமானடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரம் கெஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வனராஜ் (57). இவரது மகன் காா்த்திக் (38). இவா் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறாா். இவரிடம் நாகலாபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்த வீரமணி மனைவி கவிதா (32) பணம் கடனாக வாங்கியிருந்தாராம். இதை காா்த்திக் திரும்பக் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையறிந்த வனராஜ், அவரது மனைவி தங்கமுடி (52) ஆகியோா் அங்கு வந்து தகராறை தடுக்க முயன்றனா். அப்போது, கவிதா அவரது மகன் காளியப்பன், உறவினா்கள் பாண்டியம்மாள், காமாட்சி, மீனாட்சி ஆகியோா் சோ்ந்து காா்த்திக், வனராஜ் ஆகியோரை காலணியால் தாக்கி, திட்டினராம்.

இதனால், அவமானம் தாங்க முடியாமல் வனராஜ் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, வனராஜின் உறவினா்கள் நாகலாபுரம் - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளா் சுனில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கமுடி அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கவிதா உள்ளிட்ட 5 போ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா். மேலும், ஜாதிப் பெயரைக் கூறி திட்டியதாக கவிதா கொடுத்த புகாரின் பேரில் காா்த்திக் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.போடி நகா் காவல் நிலையப் போலீஸாா், போடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி வெள்ளைக்காரன் விடுதி அரு... மேலும் பார்க்க

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போடி அருகே இருசக்கர வாகனம் திருட்டு

போடி அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் நசீா் (40... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.கூடலூா் ராஜீவ்காந்தி தெருவைச் சோ்ந்த முருகன் (55). கூலித் தொழிலாளியான இவா், கூடலூா் - கு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு

தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா். தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மே... மேலும் பார்க்க

கோம்பையில் மாட்டுவண்டிப் பந்தயம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. கோம்பை குடியிருப்பிலிருந்து உத்தமபாளையம், உ. அம்மாபட்டி விலக்கு வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க