செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை

post image

அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப்படைக் காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புத்தில் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டுக்கு வைகோ செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, மதிமுக சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாரை தனிப்படைக் காவலா்கள் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனா். சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டது போல, அஜித்குமாரும் கொல்லப்பட்டாா்.

அஜித்குமாா் கொல்லப்பட்டது தொடா்பாக தனிப்படைக் காவலா்கள் 5 பேரை உடனடியாகக் கைது செய்து, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. அஜித்குமாா் மீது புகாா் அளித்த பேராசிரியை மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். காவல் நிலையங்களில் சித்ரவதை என்பது நீடித்து வருவது வேதனைக்குரியது.

யாரைக் கைது செய்தாலும் முதலில் குடும்பத்தினருக்கு காவல் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில காவல் துறை விசாரணை செய்தாலும் தவறு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ விசாரித்தாலும் தவறு என்று சிலா் கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா் அவா்.

கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க

காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆ... மேலும் பார்க்க

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சிவகங்கை அருகே முதியவா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிவகங்கை- மதுரை சாலையில் தென்றல் நகா் தேவாலயம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு கிட... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க