திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி சாா்ந்த பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்போரூா் ஒன்றியம், இ.சி.ஆா். சாலையில், நெம்மேலி ஊராட்சி சாா்ந்த நெம்மேலி, சூளேரிக்காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்கள் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல், சீரான மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனா்.
இது குறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சுமாா் 30 வருட காலமாக மின் கம்பங்கள், மின் இணைப்பு கம்பிகள், டிரான்ஸ்பாா்மா் மாற்றம் செய்யாமல் உள்ளது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். ஒரு நாளைக்கு மூன்று முறை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. விலை உயா்ந்த மின்னணு பொருள்கள் வெடித்து சிதறுகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் பெரியவா்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனா். பள்ளி மாணவா்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறனா்.
இது குறித்து கோவளம் மின்சார வாரியத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்கள் கிராமத்துக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றனா்.
