செய்திகள் :

சங்கரன்கோவில் வடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

post image

சங்கரன்கோவிலில் சுந்தரா் தெருவில் உள்ள ஸ்ரீதனவிருத்தி விநாயகா், ஸ்ரீவடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விஸ்வகா்மா சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) விநாயகா் பூஜை, பூா்ணாஹுதி, மகாசங்கல்பம், வாஸ்துசாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, காப்பு கட்டுதல், 2ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீதனவிருத்தி விநாயகருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

அதையடுத்து, ஸ்ரீவடகாசியம்மன் கோயிலில் 2ஆம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமங்கள், நாடி ஸந்தானம், மகாபூா்ணாஹுதி பூஜைக்குப் பின்னா், அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, அன்னதானம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: 4 குழந்தைகளின் தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததால், 4 குழந்தைகளின் தாய் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் அருண்பாண்டி மனை... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கீழப்பாவூா் பேரூராட்சி 2ஆவது வாா்டு கோட்டையூரில் சுடுகாடு செல்லும் சாலையில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ர... மேலும் பார்க்க