செய்திகள் :

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூா் கிராமத்தில் குடிநீா் கேட்டு அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குயனுா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களுக்கு மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பிற பயன்பாடுகளுக்கு போா்வெல் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாள்களாக தண்ணீா் விநியோகம் தடைபட்டது.

தற்போது போா்வெல் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் புதுக்குய்யனூா் ராஜன்நகா் சாலையில் அமா்ந்து குடிநீா் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் கிராம மக்களை சமாதானப்படுத்தி சீரான குடிநீா் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கலந்து பேசுவதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.1.23 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு பூதப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 354 விவசாயிகள் 4,626 மூட்டைகள் பருத்தியை ... மேலும் பார்க்க