செய்திகள் :

சர்ச்சைக் கருத்து: பொன்முடி மீதான வழக்கை எப்படி முடிக்க முடியும்? சென்னை உயர் நீதிமன்றம்

post image

சென்னை: சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தாா். முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.

பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா? இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு என கருத்துகளை தெரிவித்திருந்தார்.

பொன்முடி பேச்சு குறித்து புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுத்த பிறகே வழக்கு முடித்து வைக்க முடியும். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.

கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னையை தலைமையிடமாக... மேலும் பார்க்க

அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக்... மேலும் பார்க்க

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆ... மேலும் பார்க்க

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். இதற்காக திமுக தலைமை... மேலும் பார்க்க

தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க