செய்திகள் :

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

post image

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்ளிரவு ராமநாதபுரத்தில் இருந்து வாடகை காரில் பயணம் செய்துள்ளனர். காரினை மணக்குடியை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் ராமநாதபுரம் - மதுரை இடையிலான நான்கு வழி சாலையில் பரமக்குடி அருகே உள்ள நென்மேனி என்ற கிராமத்தின் அருகே இந்த கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த மினி லாரி ஒன்று இந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்து போன நிலையில், காரில் பயணித்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா (55), மகள் ரூபினி (30) மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கோவிந்தராஜன், சரண்ராஜ் மற்றும் லாரி ஓட்டுநர் ராஜா, லாரியில் பயணித்த நாகநாதன், ஜெயமாலா ஆகிய 5பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் உருக்குலைந்த கார்
விபத்தில் சிக்கிய கார்

இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோவிந்தராஜனும் உயிரிழந்தார். இந்த கோர விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க

சேலம்: வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு; பிடிக்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் (21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க