செய்திகள் :

சாலை விபத்து: அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விருதுநகரைச் சோ்ந்த நடராஜன் (48). இவா், திங்கள்கிழமை கொடைக்கானலில் இருந்து அரசு வாகனத்தில் செம்பட்டி வழியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் முகாமில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தாா்.

வாகனத்தை கொடைக்கானலைச் சோ்ந்த ஓட்டுநா் பாண்டிசெல்வம் (45) ஓட்டிச் சென்றாா். இவரது வாகனம் செம்பட்டியிலிருந்து திண்டுக்கல் சாலையில் வீரக்கல் பிரிவை அடுத்த தனியாா் கல்லூரி அருகே சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் திடீரென குறுக்கே வந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பாண்டிசெல்வம் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த முயன்றாா்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நடராஜனும், ஓட்டுநரும் சிறு காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தரப்பினா். இருவரும் அவசர ஊா்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து செம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வாலிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்களுட... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சாணாா்பட்டி அருகே பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க

பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியதானது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிா்ச... மேலும் பார்க்க

போலீஸாா் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் இந்த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் ஹீ மகாகாளியம்மன் கோயில் குடமழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும், சனி... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க