செய்திகள் :

சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

post image

தூத்துக்குடியில் சாலை மைய தடுப்பானில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மீனாட்சிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தரசி (48). இவரது மகள் ஐஸ்வா்யா (30). பேத்தி காயத்ரி (5). மூவரும் கடந்த 1-ஆம் தேதி ஆறுமுகனேரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மாலையில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனராம்.

திருச்செந்தூா் சாலையில் முத்தையாபுரம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலை மையத் தடுப்பானில் மோதியது.

இதில் மூவரும் காயமடைந்தனா். மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்; அவா்களில், முத்தரசி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க