செய்திகள் :

சிதம்பரம் அஞ்சல் அலுவலகத்தில் பாலூட்டும் அறை திறப்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த அஞ்சல் அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம், கடவுச்சீட்டு அலுவலகம், வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்த அஞ்சல் நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அஞ்சலகத்தில் மின்விசிறி வசதியுடன் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலக தலைமை மேலாளா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் கலைவாணி பங்கேற்று பாலூட்டும் அறையை திறந்து வைத்துப் பேசினாா்.

சிதம்பரம் தலைமை அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் ஷா்மிளா, அஞ்சலக ஆய்வாளா் குமரவடிவேலு உள்ளிட்ட அஞ்சலகத் துறையினா், தாய்மாா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். மங... மேலும் பார்க்க

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் நிறுவனத்தில் சக தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி விடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கல் கிராமத்தி... மேலும் பார்க்க

‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை கைவிட வேண்டும்: அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் வலியுறுத்தினாா். தமிழ்நாடு மின் ஊழியா்கள் ... மேலும் பார்க்க

மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: அமைச்சா் சி.வெ.கணேசன்

மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருவதாக, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்கு... மேலும் பார்க்க

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க