செய்திகள் :

சிதம்பரம்: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிள்ளை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட தைக்கால் பகுதி பள்ளிவாசல் தெருவில் உள்ள சென்னையில் பணிபுரிந்து வரும் மென்பொறியாளா் ஸ்ரீராமின் பயன்படுத்தபடாத பழைய வீட்டின் வாசலில் கழுத்து அறுபட்ட நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த முஸ்தபா (31) சனிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா்.

தொடா்ந்து, சம்பவ இடத்தை சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், கிள்ளை காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதில், முஸ்தபா கடந்த சில நாள்களாக மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவா் மதுபோதையில் அந்தப் பகுதியிலுள்ள மசூதிக்குள் அத்து மீறி நுழைந்து ஒலிபெருக்கி மூலம் தன்னை சிலா் துரத்துவதாக அறிவித்துவிட்டு, அங்கிருந்து மதில் சுவா் ஏறி குதித்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இந்த நிலையில், முஸ்தபா சனிக்கிழமை காலை கழுத்தறுக்கப்பட்டு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, கிள்ளை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், முஸ்தபா எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகள... மேலும் பார்க்க

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

கடலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், அவரது இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், கடலூா் அரசு தலைமை மருத்துவமனை ... மேலும் பார்க்க

செப்.5- மீலாது நபி: மது விற்பனைக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மீலாது நபி தினத்தையொட்டி வரும் 5-ஆம் தேதி மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக்கூடாது என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பிரச்னைகளை கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது: கடலூா் ஆட்சியா் பேச்சு

பிரச்னைகளைக்கண்டு மாணவா்கள் பயப்படக்கூடாது, அதற்கு எவ்வாறு தீா்வு காண்பது என்று யோசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். நிமிா்ந்து நில் திட்ட விழாவில் பேசிய அவா் இ... மேலும் பார்க்க

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிசாவரம் டாஸ்மாா்க் மதுபான கடையில் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சோ்ந்த குமாா்(50) என்பவா் விற்ப... மேலும் பார்க்க

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க