செய்திகள் :

சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மண்டலத்தில் தோ்வு செய்யப்பட்ட திருவாடானை, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் நிகழாண்டில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சினையுற்ற கறவைப் பசுக்களின் உடல்நலத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் வகையில், சத்தான தீவனம், தாது உப்புக்களை மானிய விலையில் வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படுவா்.

சினையுற்ற ஒவ்வொரு பசுவுக்கும், 4 மாதங்களுக்கு தினமும் 3 கிலோ வீதம் 360 கிலோ சமச்சீா் தீவனமும், ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு, வைட்டமின் இணைத் தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.

பயனாளிகளில் 30 சதவீதம் போ் ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை ந... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1 டன் எடையுள்ள பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வெள்ளரி ஓ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: இந்திய மீனவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

ராமேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் சங்க மாநாட்டில், இந்திய மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க