செய்திகள் :

சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் கதை! மகளே என் மருமகளே!

post image

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் மாமியார் - மருமகள் பாத்திரங்களை மையமாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்தில் மக்களின் ரசனைக்கு ஏற்ப முற்போக்காகவும் புதிய கதைக்களத்துடனும் தொடர்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாமியார் - மருமகள் உறவைப் பற்றிய கதை மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் மாமியாரால் அனுபவிக்கும் துயரங்களும் அதனை எதிர்கொள்ளும் திருப்பங்கள் மிகுந்த காட்சிகளாக மாமியார் - மருமகள் கதைகள் ஒளிபரப்பாகின.

ஆனால், தற்போது ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடர், மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியாரைப் பற்றியது. இந்தத் தொடருக்கு மகளே என் மருமகளே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களைக் கவர்ந்த மகுவா ஓ மகுவா என்ற தொடரே தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

இத்தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி, தொடர்ந்து எதிர்மறையான பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீதா ராமன், கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களிலும் அத்தகைய பாத்திரத்திலேயே நடிக்கிறார்.

இதனால், நேர்மறையான பாத்திரத்தில் ரேஷ்மாவின் நடிப்பைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை!

After a long break, a new series focusing on mother-in-law and daughter-in-law roles will be aired on the serial again.

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க