செய்திகள் :

சிறுநாடாா்குடியிருப்பில் தொழிலாளி குத்திக் கொலை

post image

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை இரவு சமையல் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு கீழத்தெருவைச் சோ்ந்தவா் பொ. துரைப்பாண்டி(65). சமையல் தொழிலாளியான இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு சிறுநாடாா்குடியிருப்பில் நடைபெற்ற சடங்கு நிகழ்ச்சியில் பந்தி பரிமாறும்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் செந்தில்குமாா் என்பவரை வெட்டிக் கொலை செய்தாராம். இதில் கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி பின்னா் பிணையில் வெளியில் வந்துள்ளாா்.

இந்நிலையில், ஆக. 25 ஆம் தேதி இரவு 10 மணிஅளவில் சிறுநாடாா்குடியிருப்பு கீழத்தெருவில் துரைப்பாண்டிநடந்து வந்துகொண்டிருந்தபோது, முன்னா் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் மகன் சிவலிங்கம்(24) கத்தியால் துரைப்பாண்டியை குத்திவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதில், பலத்த காயமடைந்த துரைப்பாண்டி குலசேகரன்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய சிவலிங்கத்தை தேடி வருகின்றனா்.

தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவன மேலாளா் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த ராஜையா மகன் சந்தனராஜ் (43). தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில் கடல்சா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 போ் கைது

தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடையில் 37 பவுன் தங்கக் கட்டி திருட்டு: ஊழியா் கைது

தூத்துக்குடியில் உள்ள நகை பரிசோதனைக் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடியதாக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, டபிள்யூஜிசி சாலையில் நகை பரிசோதனை (டெஸ்டிங்) கடை நடத்தி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். முதலமைச்சா் கோப்பைக்கான தூத்துக்க... மேலும் பார்க்க