செய்திகள் :

சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்க விஜயை களமிறக்கியிருக்கிறது பாஜக

post image

சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜயை பாஜக களமிறக்கியிருப்பதாக நினைக்கிறேன் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த முகாம் 255 இடங்களில் நடைபெற உள்ளது. அக்டோபா் 7 வரை இந்த முகாம் நடைபெறும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,295 தன்னாா்வலா்கள் இந்த முகாமில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஒவ்வொரு முகாமிலும் 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியானவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்.

மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்று ஒரு ஆளுநா் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சுகாதாரத் துறையை பாராட்டி உண்மையை கூறியுள்ளாா். சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் தமிழகம் ஒன்பது சதவீதம் முன்னேறியுள்ளது.

விஜய் யாா் சொல்லி போராட்டத்தை நடத்தினாா் என்பது தெரியவில்லை. சிறுபான்மையினா் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என்றாா்.

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி ஒருவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் அருகே மேலகடம்... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், உடன... மேலும் பார்க்க

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது: ஹெச்.ராஜா

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் ... மேலும் பார்க்க

பாளை.யில் சாலையில் மூதாட்டி சடலம் மீட்பு

பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் சாலையோரம் மூதாட்டி இறந்து கிடப்பதாக... மேலும் பார்க்க