செய்திகள் :

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது: ஹெச்.ராஜா

post image

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மக்களை சந்திப்பது சரியானது. ஆனால், இந்த முகாமிலேயே திமுக உறுப்பினா் சோ்க்கையும் நடத்தப்படுவதாக தகவல் வருகிறது. கட்சிப் பணிக்காக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

பாளையங்கோட்டையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டங்களைத் தனியாருக்கு முழுமையாக தாரைவாா்ப்பது சரியானதல்ல. இதில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்து சென்ற பின்பு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என திமுக கூறி வருகிறது. பொய்யை மூலதனமாகக் கொண்டு பிரசாரம் செய்வது திமுகதான்.

ஏற்கெனவே, பாஜகவுடன் திமுகவும் கூட்டணியில் இருந்த கட்சிதான். அது என்ன கபளீகரமா செய்யப்பட்டுள்ளது? பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தோ்தல் நெருங்கும்போது மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

தவெக கட்சியில் வெற்றி என்பது கட்சியின் பெயரில் மட்டுமே இருக்கும். நடிகா் விஜய் குழப்பமான மனநிலையில் உள்ளாா். 2026 தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்க விஜயை களமிறக்கியிருக்கிறது பாஜக

சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜயை பாஜக களமிறக்கியிருப்பதாக நினைக்கிறேன் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட மு... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதி ஒருவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் அருகே மேலகடம்... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், உடன... மேலும் பார்க்க

பாளை.யில் சாலையில் மூதாட்டி சடலம் மீட்பு

பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பாளையங்கோட்டை பொட்டல் விலக்குப் பகுதியில் சாலையோரம் மூதாட்டி இறந்து கிடப்பதாக... மேலும் பார்க்க