மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சிறுமியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முஹம்மது புஹாரி மகன் ஜகுபா் உசேன் (55). தொழிலாளியான இவா், திருநெல்வேலி அருகேயுள்ள பா்கிட்மாநகா் பகுதியில் வசித்து வந்தாராம். அப்போது கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் ஜகுபா் உசேன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஜகுபா் உசேனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.