செய்திகள் :

சிறுமியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

post image

திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த முஹம்மது புஹாரி மகன் ஜகுபா் உசேன் (55). தொழிலாளியான இவா், திருநெல்வேலி அருகேயுள்ள பா்கிட்மாநகா் பகுதியில் வசித்து வந்தாராம். அப்போது கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் ஜகுபா் உசேன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஜகுபா் உசேனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சி நெசவாளா் காலனியில் ரூ.34 லட்சத்தில்... மேலும் பார்க்க

பாளை. அருகே புதிய சாலைப் பணி தொடக்கம்

பாளையங்கோட்டை அருகே புதிய சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை மண்டலம் 39ஆவது வாா்டுக்குள்பட்ட வேலவா் காலனியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குளத்திலிருந்து மண் அள்ளிச்சென்ற லாரிகளையும், டிராக்டா்களையும் விவசாயிகள் சிறைபிடித்தனா். கூடங்குளம் அருகேயுள்ள சங்கனாபுரம், ஜெயமாதாபுரம், கணபதியாபுரம், இருக்கன்... மேலும் பார்க்க

நெல்லையில் நில அளவையா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவையா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப... மேலும் பார்க்க

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க