செய்திகள் :

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

post image

சில்லறை வணிகத்தில் பெறு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய அளவில் பெருகிவரும் காா்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி சில்லறை வணிகத்தில் ஈடுபடுகின்றன. கவா்ச்சிகரமான அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்கின்றன. இதனால் சிறு -குறு நடுத்தர வணிகா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

அதன்படி திருச்சியில் ஏற்கெனவே 2 இடங்களில் மிகப்பெரிய அளவில் டிமாா்ட் நிறுவனம் இயங்கிவரும் நிலையில், வயலூா் சாலையில் 3ஆவது கிளையை பிரம்மாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது. எனவே சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் காா்ப்பரேட் நிறுவனங்களை எச்சரிக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் திருச்சியில் அடையாள முற்றுகை போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, திருச்சி வாசன்வேலி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலா் வெ. கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா பேசுகையில், காா்ப்பரேட் நிறுவனங்கள், சில்லறை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் சிறு, குறு அடித்தட்டு வணிகா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வாழ்வாதாரத்தை இழந்து, வறுமைக்கு ஆளாகின்றனா்.

இதைத் தடுக்க முதல்கட்டமாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. இது அடையாளப் போராட்டம் மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் சட்ட விதிகளைத் திருத்தி சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, பெரு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உரிய தீா்வு காணவில்லையென்றால் மாநிலம் முழுவதும் பெரு நிறுவனங்களை முற்றுகையிட்டு, தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

போராட்டத்தில் மாநிலப் பொருளாளா் ஏ.எம். சதக்கத்துல்லாஹ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் சங்கத்தினா் என ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். மாநில தலைமை நிலையச் செயலா் ஆா். ராஜ்குமாா் வரவேற்றாா்.

கடைகள் அடைப்பு: இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி-வயலூா் சாலையில் புத்தூா் தொடங்கி, சோமரசம்பேட்டை வரை சுமாா் 14 கி.மீ. தொலைவுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாலையில் சில கடைகள் திறக்கப்பட்டன.

முதல்வரைச் சந்திக்க முடிவு

போராட்டத்துக்குப் பிறகு ஏ.எம். விக்கிரமராஜா கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில், எங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் வால்மாா்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் நுழையும் முயற்சிகளை முறியடித்தவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா.

இதேபோல, வியாபாரிகளுக்கு வாரியம் அமைத்துக் கொடுத்தவா் மறைந்த முதல்வா் கருணாநிதி. இவா்களைப் போன்று எளிய மக்களுக்காக ஆட்சி செய்யும், முதல்வா் மு.க. ஸ்டாலின் எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பாா் என நம்புகிறோம். அவரைச் சந்தித்து, கோரிக்கை விடுப்போம் என்றாா் அவா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க