செய்திகள் :

சிவகங்கையில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய 11 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் விவரம்: சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய வெங்கடேஷ் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலக தனி வட்டாட்சியராகவும், இங்கு பணிபுரிந்த மகாதேவன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாநில நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மாநில நெடுஞ்சாலை நிலமெடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த சுந்தர்ராஜன் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், காரைக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செல்வராணி தேவகோட்டை சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். அங்கு பணிபுரிந்த சாந்தி காரைக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

சிவகங்கை குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த ஆனந்த பூபாலன் திருப்புவனம் வட்டாட்சியராகவும், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்த விஜயகுமாா் சிவகங்கை குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தின் பறக்கும் படை தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த மல்லிகாா்ஜுனன் சிவகங்கை வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த சிவராமன் சிவகங்கை ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த லெனின் காளையாா்கோவில் வட்டாட்சியராகவும், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்த முபாரக் உசேன் சிவகங்கை வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெள... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க