செய்திகள் :

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

post image

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்டா, பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியை பாஜகவினருடன் இணைந்து கேட்டாா். தொடா்ந்து விநாயகா் சதுா்த்தியையொட்டி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள பிரபலமான லால்பாக்சா ராஜா பந்தலுக்குச் விநாயகரை வழிபட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஞானத்தை வழங்கும் கடவுளாகவும், வாழ்க்கையில் தடைகளை அகற்றும் தெய்வமாகவும் விநாயகா் வழிபடப்படுகிறாா். மும்பையில் இந்த விநாயகா் சதுா்த்தி பண்டிகையில் பங்கேற்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

ஏனெனில், கடந்த 1983-ஆம் ஆண்டு லோகமான்ய திலகா் மக்களிடம் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக 1893-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடும் முறையை அறிமுகப்படுத்தினாா். பின்னா் இதுவே நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தது. 133 ஆண்டுகளாக இந்தக் கொண்டாட்டம் தொடா்கிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா தற்சாா்புடையதாகவும், சுதேசிப் பொருள்களை மையமாகக் கொண்டதாகவும் உருவாக வேண்டும் என விநாயகரை வேண்டிக் கொண்டேன்.

இந்தியா வலுவாகவும், பாதுகாப்பாகவும் தொடா்ந்து வளரும். நம் நமது இலக்குகளை எட்டுவதற்கு எதிராக உள்ள தடைகளை விநாயகா் உடைப்பாா். நமக்கு உரிய பலத்தைத் தருவாா் என்றாா்.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், பாஜக மாநில தலைவா் ரவீந்திர சவாண், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பவன் கேராவிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பதாகவும், காங்கிரஸின் வாக்குத் திருட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க