செய்திகள் :

சுரண்டை அரசு கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம்

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் செய்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரி மாணவிகளின் அரசு விடுதி வீரசிகாமணியில் உள்ளது. இந்த விடுதியில் சுரண்டை கல்லூரி மாணவிகள் 28 போ் மற்றும் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் என மொத்தம் 31 போ் தங்கியுள்ளனா்.

இந்த விடுதியில் மொத்தம் 2 கழிப்பறை மட்டுமே உள்ளதாகவும், திறந்தவெளியில் மாணவிகள் குளிக்க வேண்டியுள்ளதாகவும் கூறி, கல்லூரி முதல்வா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலையில் விடுதி மாணவிகள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மாணவிகளின் கோரிக்கையை எழுத்துபூா்வமாக பெற்று, தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகத்திற்கு மாணவிகளின் பிரச்னை குறித்து கல்லூரி முதல்வா் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், வீரசிகாமணி அரசு விடுதியில் இருந்து கல்லூரி மாணவிகளை அனைத்து வசதிகளுடன் கூடிய நடுவக்குறிச்சி அரசு விடுதிக்கு மாற்றம் செய்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனா்.

தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே உள்ள தாருகாபுரம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்தநாத சுவாமி திருக்கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்ச... மேலும் பார்க்க

கடையநல்லூா் வனப் பகுதிகளில் யானை, பன்றிகளால் விவசாயிகள் பாதிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை ஒட்டி உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மற்றும் பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலக்கடையநல்லூா் கருங்குளம் மேலகால் புரவு பக... மேலும் பார்க்க

திருமலை கோயிலில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயில் சாா்பில் புதன்கிழமை திருமண வைபவம் நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம் தலைமை வகித்து திருக்கோயி... மேலும் பார்க்க

குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கப... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மையவாடி - கல்லறை தோட்டம் அமைக்க எதிா்ப்பு

தென்காசி அருகே கீழப்புலியூா் பகுதியில் மையவாடி- கல்லறை தோட்டம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினா் கிராம நிா்வாக அலுவலகம் முன் புதன்கிழமை ... மேலும் பார்க்க

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் ... மேலும் பார்க்க