செய்திகள் :

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

post image

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த திட்டம் நிறைவேற்றப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் நான்கு இடங்கள் என்றால், அது கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலை, பெரம்பூர் ஆகியவற்றில்தான் இந்த வசதி விரைவில் வரவிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது போல, சென்னையின் நான்கு இடங்களில், தலா 78 பேர் அமரும் வகையில் கொளத்தூர், ராயபுரம், வால் டாக்ஸ் சாலையில் பேருந்து நிறுத்தங்களும், 54 பேர் அமரும் பேருந்து நிறுத்தம் பெரம்பூரிலும் அமைக்கப்படவிருக்கிறது. இதனுடன் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள், குடிநீர் வசதியுடன் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்து நிறுத்தங்களைக் கட்டி முடித்து ஒப்படைக்க, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் நான்கு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயில் காலங்களை கருத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்கள், தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல என்பதும், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த வசதி பத்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு, காலப்போக்கில் அதனை பராமரிக்காமல் விட்டுவிட்டதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த முறையும் அதுபோல பராமரிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Reports have emerged that air-conditioned bus stops will soon be set up at four new locations in Chennai.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க