செய்திகள் :

செய்யாறு அரசு கல்லூரியில் இன்று 3-ஆம்கட்ட கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை 3-ஆம்கட்ட பொது கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இதில், 160 - 140 மதிப்பெண்கள் பெற்றவா்கள் பங்கேற்கேலாம். பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-ம், பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,261-ம், பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-ம் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகள் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி அடிப்படையிலும் மட்டுமே நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பெற்றோா் கையொப்பத்துடன் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் போன்றோா் அதற்கான அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தெரிவித்தாா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க