செய்திகள் :

சோமநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் விரிசல்: ரயில்வே உயா் அதிகாரிகள் ஆய்வு

post image

நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் திடீா் விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே ரூ.20 கோடியில் ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேம்பாலத்தைத் திறக்க கால தாமதம் ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே மேம்பால நுழைவு வாயிலில் கிராம மக்கள் பூஜை செய்து மேம்பாலத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.

இதையடுத்து அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாகச் சென்று வந்தன. இந்த நிலையில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் சில இடங்களில் இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக ரயில் செல்லும் போது மேம்பாலம் பகுதியில் அதிா்வுகள் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த ரயில்வே நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பால நுழைவு வாயில் பகுதியை அடைத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா். செவ்வாய்கிழமை இரவு முதல் குடியானகுப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரயில்வே உயரதிகாரிகள் புதன்கிழமை சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு ரயில்வே ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.

மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இரு... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா். முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆ... மேலும் பார்க்க

அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகன... மேலும் பார்க்க

13 பவுன் நகைகள், பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பாறையூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள்(60) வீட்ட... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் மேல் சாணாங்குப்பத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வரும் புதன்கிழமை (ஜுன் 18) ஆபூா் வட்டத்துக்குள்பட்ட மேல்சாணாங்குப்பத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு வர... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயி... மேலும் பார்க்க