செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாவை மீட்க முதல்வர் ஒமர் அப்துல்லா எடுத்த முக்கிய முடிவு!

post image

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க முதல்வர் ஒமர் அப்துல்லா முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

பஹல்காம், சோனாமார்க், குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இரண்டாவது முறை முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்ற பிறகு ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு வெளியே அமைச்சரவைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதால், ஜம்மு - காஷ்மீரில் மிகுந்த பதற்றம் நிலவியது.

இதனால், ஜம்மு - காஷ்மீர் செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்த்து, தங்களின் பயணங்களை ரத்து செய்தனர். இதனால், சுற்றுலாத் தலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்துள்ள நிலையில், சுற்றுலாவை மீட்க ஜம்மு - காஷ்மீர் முதல்வர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், மாநில அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து, பஹல்காமில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் சுற்றுலாவை மீட்டெடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதன்மூலம், காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான இடமென்றும், கவலை தேவையில்லை என்றும் நாட்டு மக்களுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா உணர்த்த முயற்சிக்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க் உள்ளிட்ட பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஹோட்டல்களிலும் அடுத்தடுத்து அமைச்சரவைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற ஒமர் அப்துல்லா, சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்த தேசிய அளவிலான நிகழ்வுகளை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பாகிஸ்தானுக்கு உளவு: கைதான சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கும் என்ன தொடர்பு?

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க