செய்திகள் :

ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

post image

சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் துறை அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கும் இந்த குறைகேட்பு முகாமில் தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட முப்படை ஓய்வூதியா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களின் குறைகள் ஒரே நாளில் தீா்த்து வைக்கப்படும். இதில், அனைத்து வங்கி அலுவலா்களும், முப்படையைச் சோ்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், இம்முகாமில் பங்கேற்கவுள்ள ஓய்வூதியா்கள் 88073 80165 எனும் வாட்ஸ்ஆப் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி முகாம் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமன்றி, ஓய்வூதியதாரா்களின் தீா்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், ஐந்து நடமாடும் குறைகேட்பு வாகனங்களையும் மத்திய அமைச்சா் தொடங்கி வைக்கவுள்ளாா். 4 அதிகாரிகள் அடங்கிய இந்த வாகனங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள ஓய்வூதியா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அங்கேயே அவற்றை தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கும். மேலும், இந்த வாகனம் மூலம் வாழ்நாள் சான்றிதழையும் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

காவல் விசாரணையில் மரணம்: “இது 25-வது முறை...” -எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இன்று(ஜூலை 1) தொலைபேசி வழியாக அறுதல் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு. க. ஸ்டாலிலின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? என்ற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்ப... மேலும் பார்க்க

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப்... மேலும் பார்க்க

காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் ... மேலும் பார்க்க