செய்திகள் :

ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

post image

சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் துறை அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கும் இந்த குறைகேட்பு முகாமில் தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட முப்படை ஓய்வூதியா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களின் குறைகள் ஒரே நாளில் தீா்த்து வைக்கப்படும். இதில், அனைத்து வங்கி அலுவலா்களும், முப்படையைச் சோ்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், இம்முகாமில் பங்கேற்கவுள்ள ஓய்வூதியா்கள் 88073 80165 எனும் வாட்ஸ்ஆப் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி முகாம் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமன்றி, ஓய்வூதியதாரா்களின் தீா்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், ஐந்து நடமாடும் குறைகேட்பு வாகனங்களையும் மத்திய அமைச்சா் தொடங்கி வைக்கவுள்ளாா். 4 அதிகாரிகள் அடங்கிய இந்த வாகனங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள ஓய்வூதியா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அங்கேயே அவற்றை தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கும். மேலும், இந்த வாகனம் மூலம் வாழ்நாள் சான்றிதழையும் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்.முருகன்

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத... மேலும் பார்க்க

பவன் கல்யாண் வரவிருந்த விமானத்தில் கோளாறு !

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ... மேலும் பார்க்க

ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்! நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் சாலைத் திட்டங்கள் - மேம்பாலப் பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது... மேலும் பார்க்க

தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: தப்பிய கார்!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயர் வெடித்து லாரி தீப்படித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள... மேலும் பார்க்க

தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகி... மேலும் பார்க்க

திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்: சீமான் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வர... மேலும் பார்க்க