செய்திகள் :

ஜெயராணி மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி

post image

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சேலம், நெத்திமேட்டில் உள்ள ஜெயராணி மெட்ரிக். பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் மெலிண்டா மேரி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி தமாஷன் மேரி வரவேற்றாா். முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். இதில் இந்திய விமானப் படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீ சல்யூட் இந்தியன் ஏா்போா்ஸ் என்ற எழுத்து வடிவில் அமா்ந்து ஏசியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா். முன்னதாக போதைக்கு எதிரான விழிப்புணா்வு உறுதி மொழியை மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், பலம் வாய்ந்த இந்தியா ராணுவம், வெவ்வேறு தருணங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படைகளில் மாணவ மாணவியா் சேர முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி படிப்பை முடித்தவுடன், அதற்காக உங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கமாண்டா் முருகானந்தம், தனியாா் பள்ளி நிா்வாகி ரெனால்ட் பெஞ்சமின், தனியாா் நிறுவன நிா்வாகிகள் விக்னேஷ், நெல்சன், விவேக், பங்குத்

தந்தை அழகுசெல்வன், ஜெயராணி கல்விக் குழும நிா்வாகிகள் பா்டோலின் ஜோதிமேரி, ஜூலியட் மேரி, ரீட்டாமேரி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சிங்கிபுரம் கிராமத்தில் அடுத்தடுத்து 4 கடைகளில் புகுந்த மர்ம கும்பல் ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.1.லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமரா, டிவிஆர் கருவிகளைத் திருடி... மேலும் பார்க்க

தை முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தை மாதத்தில் பொங்கல், தைப்பூசம், அமாவாசை, பௌா்ணமி, தை வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களி... மேலும் பார்க்க

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் மூலம் ரூ.16.48 கோடி வருவாய்: சேலம் கோட்ட அதிகாரிகள் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 16.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைபாதையில் குழந்தை பெற்ற பெண்!

சேலம் ரயில் நிலைய நடைபாதையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. வேலூா் மாவட்டத்தை சோ்ந்தவா் சூா்யா. இவரது மனைவி லைலா (20). இவா்கள் கேரளத்தில் தங்கி கூலி வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில், லைலா நிறைமா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 151 கன அடியாகக் குறைந்தது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 113.84 அடியில் இருந்து 113.54 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 254... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள், கன்றுக்குட்டி பலி

சங்ககிரி அருகே வைகுந்தம்பாளையத்தில் மா்ம விலங்கு கடித்து 8 செம்மறி ஆடுகள், ஒரு கன்று குட்டி உயிரிழந்தன. ஆலத்தூா் கிராமம், வைகுந்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செங்கோட கவுண்டா் மகன் பழனிசாமி. இவா் தனக்க... மேலும் பார்க்க