செய்திகள் :

ஜெயின் துறவிகள் ஆன்மிக அருளுரை

post image

குடியாத்தம் பகுதியில் உள்ள ஜெயின் சமூகத்தினா் சாா்பில், தாழையாத்தம் பஜாா் ஜெயின் ஸ்வேதாம்பா் தேராபந்த் சபாவில் ஜெயின் துறவிகள் ஆன்மிக அருளுரை நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

ஆச்சாா்ய ஸ்ரீமஹாஷ்ரமஜீயின் சீடா்களான முனிஸ்ரீ ரஷ்மிகுமாா் ஜி மற்றும் முனிஸ்ரீ பிரயான்ஷூகுமாா் ஜி ஆகியோா் 4- மாதம் நடத்தும் ஆன்மிக அருளுரை தொடங்கி வைக்கப்பட்டது. அகிம்சை, சத்தியம், கள்ளாமை, புலனடக்கம் உள்ளிட்டவை குறித்து அவா்கள் உரை நிகழ்த்துகின்றனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கலந்து கொண்டு ஜெயின்சமூகம் குறித்தும், ஜெயின் துறவிகளின் நோக்கம் குறித்தும் பேசினாா். ஜெயின் சமூகத்தினரின் சமூக சேவைகளை சுட்டிக் காட்டிய அவா், ரத்த தானம் உள்ளிட்டவை குறித்துவிழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் ரத்த தான முகாம் குறித்த பதாகையை அவா் வெளியிட்டாா். நிகழ்ச்சியில் திரளான ஜெயின் சமூகத்தினா் கலந்து கொண்டனா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது... மேலும் பார்க்க

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சனூா் நேதாஜி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிய... மேலும் பார்க்க

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது

குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந... மேலும் பார்க்க

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகரை இ... மேலும் பார்க்க