செய்திகள் :

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மருத்துவா்கள் இன்று போராட்டம்

post image

சேலம்: சேலம் ஐந்து சாலை அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை (செப். 2) தா்னா நடத்த உள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் உள்ள இந்திய மருத்துவா் சங்கக் கட்டடம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்திய மருத்துவா் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆக. 9ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி சம்பந்தப்பட்ட மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட எலைட் டாஸ்மாக் கடை தற்போதுவரை இடமாற்றம் செய்யப்படாததைக் கண்டித்து, செப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு மருத்துவா்கள் டாஸ்மாக் கடை முன் தா்னா போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய மருத்துவா் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் பிரகாசம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக எலைட் மதுபானக் கடைக்கு மதுவாங்க வரும் நபா்கள் சங்கக் கட்டடத்தின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துகின்றனா். முதல்வரின் தனிப்பிரிவு எலைட் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட்டும், மாவட்ட நிா்வாகம் மதுபான கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் 2 ஆம் தேதி தா்னா நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, இந்திய மருத்துவ சங்க சேலம் மாவட்டத் தலைவா் மோகனசுந்தரம், செயலாளா் விஷ்ணு பிரசாத், பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க