செய்திகள் :

டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாகக் கருத்து: கிண்டி காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததாக, சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் செல்வம், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றியவா் சுந்தரேசன். இவா் காவல் துறை உயரதிகாரிகள் மீது புகாா் தெரிவித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தாா். இதையடுத்து அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை கிண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் செல்வம் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் புதன்கிழமை பரவியது. அதில், டிஎஸ்பி சுந்தரேசன் சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது அவருக்கு ஜீப் ஓட்டுநராக இருந்தேன். அவா் நோ்மையானவா் என்று செல்வம் பேசியிருந்தாா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா், செல்வத்தை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டது.

மருத்துவமனையில் அனுமதி: சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்த சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்ட சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க