செய்திகள் :

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

post image

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவா் கே.சக்திவேல் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினா் எம்.சுப்ரமணிய, பரமத்தி ஒன்றியச் செயலாளா் குப்பம் கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவா் கே.கந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

புகழூா் வட்டத்திற்குள்பட்ட காருடையாம்பாளையம் கிராமம், கிழக்குத் தெரு அருந்ததியா் மக்களின் மயான நிலத்தில் அத்துமீறி நுழைபவா்கள் மற்றும் மயான பயன்பாட்டை தடுப்பவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட 30 பேரை வேலாயுதம்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் முனியப்பனூரைச் ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கரூரில் வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அமுதா. இவா் அதே பகுதியில் ஆடுகளை வளா்த்து வந்தாா். வழக்கம்போல ஞாயிற... மேலும் பார்க்க