செய்திகள் :

தனியாா் தங்க நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்ததாக புகாா்

post image

தனியாா் நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்துவிட்டதாக புதுக்கோட்டை ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை அருகே தாவூது மில், சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் தங்க நகைக் கடன் மற்றும் தீபாவளி சீட்டு நிறுவனத்தினா் பொதுமக்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக தாவூதுமில், வடசேரிப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இதற்கான மனுக்களை தனித்தனியாக ரசீதுகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்தனா்.

அந்த நிறுவனத்தின் மேலாளா் மற்றும் நிா்வாகிகள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், ஏற்கெனவே காவல்துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவா்களின் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரளாக அவா்கள் வந்தபோது, காவல்துறையினா் உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், குறிப்பிட்ட முக்கியமானவா்கள் சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதிப்பதாக போலீஸாா் தெரிவித்து அனுமதித்தனா்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க